திருஆப்பனூர் வரலாறு
திருஆப்பனூர் வரலாறு
முன்னுரை
ஆப்பநாடு, பாண்டியநாடு, ராமன்நாடு ஆகியவை தமிழகத்தின் தென் பகுதியிலுள்ள சமகால சிரிய ராஜ்ஜியங்கள் ஆகும்.
சேதுபதிகளின் ஆட்சியாளர்கள் ராமன்நாடு மற்றும் ஆப்பநாடு ஆகியவற்றை குறிப்பிடதக்க வகையில் ஆட்சி செய்தனர்.
10 நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆப்பநாடு செழிப்பு, சமாதானம், தைரியம் ஆகியவற்றின் நிலமாக இருந்தது.
இப்போது இந்த நிலம் தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆனால் இது இப்போது ஒரு சிரிய கிராமமாக உள்ளது மற்றும் பழங்கால நாகரீகங்களின் கவனக்குறைவாகவே இருக்கின்றது.
இந்த புராதான நகரத்தைப் பற்ரிய தகவலை இந்த வலைப்பதிவு உங்களுக்கு தருகிறது. மேலும் புவியியல் தகவல்களுக்கு நீங்கள் விக்கிபீடியா வலைத்தளத்தை பயன்படுத்தலாம்.
திருஆப்பனூரின் மர்மங்கள்

திருஆப்பனூர் பல மர்மமான கதைகளை உள்ளடக்கிய ஒரு கிராமம். இங்கு மிகவும் முக்கியதுவம் வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது..
நாம் அனைவரும் அழிந்த கண்டங்களான லெமூரியா, அட்லாண்டிஸ், த்வாரகா பற்றியும் மற்றும் சில அழிந்த நிகழ்வுகள் பற்றியும் கேள்விப் பட்டிருப்போம். அதுபோலத் தான் திருஆப்பனூரின் முழு நகரமும் அழிந்தது என்றால் உங்களுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருக்கும்….
ஆம் பல வனிகர்களை உள்ளடக்கி, மாபெரும் வனிக நகரமாக திகழ்ந்த திருஆப்பனூர் கடவுளின் கோபத்தால் அழிந்தது என்பது ஒரு சோக சரித்திரமே…..
மேலும் இங்கு கண்டுகொள்ளப்படாத மற்றும் வெளியிடப்படாத பல மர்மங்களும் அடங்கியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உன்மையே…
திருஆப்பனூர் வரலாறு
ஆற்ற்ங்கரையில் அமைந்த்திருந்த ஒரு அழகிய நகரம் பண்டைய திருஆப்பனூர் நகரம். பல வனிகங்கள் புரிந்து வனிகத்தில் சிறந்து விளங்கிய நகரம். இங்கு சைவமும் வைனவமும் சிறந்து விளங்கியது என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. எடுத்துக்காட்டாக திருஞானசம்பந்தர் பாடிய "திருஆப்பனூரானே" எனும் தேவாரப் பாடல் ஒரு சான்று… மற்றும் ஸ்ரீராமர் சீதையை மீட்கச் செல்லும்போது இங்கு ஸ்ரீராமர்,லெட்சுமனர்,ஹனுமன் மூவரும் நிழலில் இலைப்பாரினர் என்ற எழுதப்படாத கூற்றும் உண்டு.
திருஆப்பனூரில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டசிவன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக் கோவில் பாண்டிய நாட்டிலுள்ள 14 புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் நாங்காவது ஸ்தலமாகும். மேலும் இங்கு பூசாரிகள் நியமிக்கப்பட்டு ஆறு பூஜைகளும் சிறப்புற நடைபெற்று வந்தன.
கோவிலின் தலைமை பூசாரி கடவுள் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவர். கடவுளை வேண்டி ஒரு கை மண் எடுத்து உலையில் போட்டாலும் அது சோறாக மாறக்கூடிய அளவு பக்தி கொண்டவர்.
இந்த நிலையில் தான் வானம் பார்த்த சீமை ஆப்பநாட்டில் மழை தண்ணீர் இல்லாமல் பஞ்சமும் வறுமையும் ஏற்பட்டது. குளம்,ஆறு,ஏரி,கிணறு எல்லாம் வறண்டு போனது. குடிப்பதற்க்குக் கூட தண்ணீ கஷ்டம். இதனால் மிகவும் வறுமைக்குள்ளானது திருஆப்பனூர்.
இந்நிலையில் தான் கோவில் குளத்தில் உள்ள நீரை பயன்படுத்துவது தொடர்பாக தலைமை பூசாரிக்கும் ஊர் மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு ஊர் மக்களால் பூசாரி கடுமையக தாக்கப்படுகிறார். இதனால் மனமுடைந்த பூசாரி சிவபெருமானிடம் சென்று கண்ணீர் விட்டு புலம்பினார்.
இதனால் கடுமையான கோபமடைந்த சிவபெருமான் பூசாரியின் கனவில் தோன்றி இந்த ஊரில் துஷ்டர்கள் பெருகிவிட்டார்கள் சிலரைத் தவிர இந்த ஊர் மக்கள் வாழும் தகுதியினை இழந்துவிட்டார்கள் எனவே அவர்கள் அழிக்கப்பட வேண்டும் நீ பான்டிய நாட்டு மதுரையில் உள்ள செல்லூர் எனும் இடத்திற்குப் போ.. இந்த ஊரை அழித்துவிட்டு வருகிறேன் என்று கூறி மறைந்தார்.
உடனே பூசாரியும் திருஆப்பனூரை காலி செய்துவிட்டு மதுரை நோக்கி சென்றார். திருஆப்பனூரில் வாழ்ந்த்து கொண்டிருந்த ஓரிரு நல்லவர்களிடம் கனவில் தோன்றி இந்த ஊர் அழிக்கப்பட போகிறது நீங்கள் இந்த ஊரைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்கிறார். அவர்களும் ஊரைவிட்டு தென்திசை நோக்கி சென்றனர்…
அடுத்தநாள் புயல்காற்றுடன் சேர்த்து பெரிய மழயும் பேய்கிறது. மழை என்றால் தண்ணீர் மழையல்ல…. மண் மழை…சிவபெருமானின் கோபத்திற்க்கு ஆளான திருஆப்பனூர் நகரம் மண் மழயால் பூமிக்குள் புதையுண்டு போனது.
புதிய திருஆப்பனூர்
திருஆப்பனூர் அழிவுககு முன் ஊரைவிட்டு வெளியேரிய நல்லவர்கள் சோழ நாட்டிலுள்ள கிலுவைமலை எனும் இடத்திற்க்கு சென்று வாழ்ந்ததாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குப் பிறகு அவர்களை அரியநாயகி அம்மன் மீண்டும் திருஆப்பனூருக்கு கூட்டி வந்ததாகவும் ஒரு கூற்று உள்ளது.
புதிய திருஆப்பனூரை சிற்றரசர்களான வெற்றிமாலைத் தேவர் மற்றும் உடையத் தேவர் நல்லாட்சி புரிந்தனர். மேலும் வெற்றிமாலைத் தேவர் மற்றும் உடையத் தேவர் பற்றிய சுவாரசியமான பெரிய வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.
இன்றும் அந்த ஊரில் வெற்றிமாலைத் தேவர் மற்றும் உடையத் தேவர் வம்சாவழியினர் பல தலைமுறைகள் தாண்டியும் வாழ்ந்துவர்கின்றனர். மேலும் அவர்களைச் சேர்ந்த எட்டு தலைமுறையைச் சேர்ந்த சொந்தங்களும் வாழ்ந்து வருகின்றனர்.
முடிவுரை
ஆற்றங்கரையில் நாகரீகம் வளர்த்த பண்டைய திருஆப்பனூர் நகரம் பூமிக்குள் தூங்குகிறது. பழைய திருஆப்பனூரைச் சேர்ந்த உடமைகளும் பண்டங்களும் தங்க நகைகளும் தொல்லியல் பொருட்களாக பூமிக்கு அடியில் உள்ளது,
அதைப் பற்றி அறிய முற்பட்டு திருஆப்பனூரில் தொல்லியல் ஆராய்ச்சி முயர்ச்சி செய்ய முயன்ற பொழுது அவர்களது வாழ்க்கையில் பெரிய துர்சம்பவம் ஏற்பட்டு அவர்கள் அந்த முயற்ச்சியையே கைவிடும் அளவு சம்பவங்கள் நடந்தன என்பது மறுக்க முடியாத உன்மை…
நகரமாக திகழ்ந்த திருஆப்பனூர் இப்போது கிராமமாகி ஆப்பனூர் என்ற பெயருடன் விளங்குகிறது. மேலும் அந்த சிவன் கோவிலும் புதுப்பிக்கப்பட்டு ஆப்பனூர் மக்களால் வனங்கப்பட்டு வருகிறது.
கோபித்துக்கொண்டு போன சிவபெருமான் தற்போதுள்ள மதுரையில் உள்ள செல்லூர் எனும் ஊரில் "திருவாப்புடையார்" என்ற பெயரோடு ,மதுரை மக்களுக்கு அருள் வழங்கி வருகிறார்..
இப்போதும் ஆப்பனூர் சென்றால் பண்டைய திருஆப்பனூர் பெருமைகள் பற்றி அந்த ஊர் மக்கள் பெருமை பாடிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அருமை அருமை
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteI am Appanoor
ReplyDeleteWow super thank you for news
ReplyDeleteசிறப்பு
ReplyDeletesemada keep it up
ReplyDeleteSuper
ReplyDeleteIam Aappanoor person
ReplyDeleteI'm Aappanoor, Appanadu Udaiyathevan Vamsam
ReplyDeleteசிறப்பாக வரலாற்று பெருமையை பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDelete